குழந்தைநல மற்றும் பச்சிளங் குழந்தைகள் மருத்துவம் என்பது குறிப்பாக குழந்தை பராமரிப்பில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவாகும். குழந்தைநல மருத்துவம் என்பது பொதுவாக குழந்தைகளின் ஒட்டுமொத்த நலனைப் பராமரிப்பதைக் குறிக்கிறது, பச்சிளங் குழந்தைகள் மருத்துவமானது, புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. குழந்தை பிறந்த பிறகு ஆரம்ப கட்டங்களில் குழந்தை நல மருத்துவர்களும், சிசு மருத்துவர்களும் முக்கிய பங்காற்றுகின்றனர். எனினும், குழந்தைகள் மற்றும் வளரினம் பருவத்தினரின் மருத்துவ பிரச்சினைகளுக்கு குழந்தை நல மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றனர்.
ஆம்பூர் நகரம் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். நகரத்தின் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்துவரும் ஆம்பூரில் உள்ள மிகச்சிறந்த குழந்தைநல மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான மருத்துவமனையான கே.எம்.என்.யு மருத்துவமனைகள், குழந்தைநல மற்றும் பச்சிளங்குழந்தைகள் மருத்துவம் ஆகிய இரண்டிலும் முழுமையான மூன்றாம் நிலை பராமரிப்பை வழங்குகிறது.
இதயத்தால் குழந்தை பராமரிப்பு மையமான, கே.எம்.என்.யு மருத்துவமனை, ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து, வளரினம் பருவத்தை அடையும்வரை, கவனித்துக்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் சவாலான நோயாய்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிறைய அனுபவங்களைக் கொண்டிருக்கும் சில சிறந்த குழந்தைநல மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் உள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் முக்கிய நோக்கம் உங்கள் குழந்தைக்கு ஆரம்ப கட்டங்களிலிருந்தே ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதாகும். மருத்துவமனையில் உள்ள குழந்தை நல மருத்துவர்களும், சிசு மருத்துவர்களும்
சக்திவாய்ந்த மருத்துவக் குழுவை உருவாக்கி, குழந்தை பிறந்தது முதல் இணைந்து பணிபுரிகிறார்கள்.
சரும தடிப்புகள் மற்றும் உணவு ஒவ்வாமை போன்றவை உள்ளடக்கிய ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை எங்கள் பல்துறை குழந்தைநல மருத்துவர்கள் கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு மிக ஆரம்ப கட்டத்திலலேயே அவசர சிகிச்சை தேவைப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஆஸ்துமாவும் ஒன்றாகும். கே.எம்.என்.யு மருத்துவமனையில் இந்த குறைபாட்டுக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையளிக்கத் தேவையான அனைத்து மருத்துவ சாதனங்களும் மருத்துவ நிபுணத்துவமும் உள்ளது. ஆம்பூரில் உள்ள இந்த சிறந்த குழந்தைநல மற்றும் பச்சிளங் குழந்தைகள் பிரிவிலுள்ள மருத்துவர்கள் ஒரு குழந்தையின் ஆயுள் முழுவதும் கவனிப்பு தேவைப்படக்கூடிய பெருமூளை வாதம், குழந்தை பருவ நீரிழிவு மற்றும் குழந்தை பருவ உடல் பருமன் முதலியவற்றிற்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தவர்களாவர்.
குறைப்பிரசவ நிகழ்வுகளில் சிறப்பான சிகிச்சையளிக்கும் சிசு மருத்துவர்கள் அடங்கிய எங்கள் நிபுணர் குழுவானது எங்கள் குழந்தைநல மருத்துவர்களுடன் மிகஅழகாக இணைந்து பணியாற்றுகிறது. மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிக்கத் தேவையான அனைத்து மருத்துவ சாதனங்களுடன் நன்கு வடிவமைக்கப்பட்ட பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (NICU) உள்ளது. குழந்தை தேவையான வெப்பநிலையின் கீழ் வைக்கப்படுவதை உறுதி செய்ய இந்த மருத்துவமனையில் இன்குபேட்டர் வசதிகளும் உள்ளன.
எங்கள் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் உள்ள எங்கள் நிபுணத்துவம் பெற்ற சிசு மருத்துவர்கள் அடங்கிய குழுவால் சிகிச்சையளிக்கப்படும் சில நிலைமைகள் பின்வருமாறு,
• சுவாசக் கோளாறுகள்
• இதயத்தில் பிறவி கோளாறுகள்
• சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்பு கோளாறுகள்
• சிறுநீரக மற்றும் சிறுநீர் கோளாறுகள்
• பச்சிளம் குழந்தை பக்கவாதம்
• பச்சிளம் குழந்தைகள் வலிப்பு
• வளர்சிதை மாற்ற கோளாறுகள்
ஆம்பூரில் உள்ள சிறந்த குழந்தைநல மற்றும் சிசு மருத்துவமனையில் உள்ள எங்கள் மருத்துவர்கள் குழுவுக்கு, குழந்தை பராமரிப்பு அடிப்படைளில் நன்கு பயிற்சி பெற்றும் அவசரகாலங்களைக் கையாள்வதில் நன்கு அனுபவமும் வாய்ந்த ஒரு இரக்கமுள்ள மற்றும் அக்கறையுள்ள நர்சிங் குழு ஆதரவளிக்கிறது
ஒரு அன்பான சூழல் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மருத்துவமனையில் நுழைந்த நாள் முதல் அவர்களை வரவேற்கிறது, மேலும் நோயாளிகள் மற்றும் குடும்பங்கள் அவர்கள் தங்கியிருக்கும் நாள் முழுவதும் வசதியாக உணர அனைத்துவிதமான முயற்சியும் எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் எங்கள் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு ஸ்பெஷலானவர்கள், மேலும் எங்கள் மருத்துவ மற்றும் நிர்வாக ஊழியர்களிடமிருந்து சிறந்த கவனிப்பை நீங்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
ஆம்பூரில் உள்ள கே.எம்.என்.யு மருத்துவமனைகள் மனமகிழ்ச்சியையும் உள்ளங்களிப்பையும் அளிக்கின்றது